search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி நடத்தையில் சந்தேகம்- கணவரின் உயிரை பறித்தது

    மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வேலன் தோட்டம்  காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் குடியரசு மணி (வயது 34). இவர் தனியார் கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மாதவா (வயது 30). இவர் டெய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சஞ்சய் (10) என்ற மகன் உள்ளான். 

    இதற்கிடையே மாதவா நடத்தையில் குடியரசு மணி சந்தேகம் கொண்டார். மேலும் குடியரசு மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு இது தொடர்பாக அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அவ்வப்போது இரு வீட்டு குடும்பத்தினரும் தலையிட்டு சமாதானம்செய்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மாதவா வீடு திரும்பிய போது அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் இருந்த குடியரசு மணி வழக்கம் போல் தகராறு செய்தார். அங்கு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தலையிட்டு குடியரசு மணியை சமாதானப்படுத்தியும் கேட்காமல் மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்தார்.

    இதையடுத்து மாதவா தனது மகனுடன் பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 11 மணியளவில் குடியரசு மணி வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதாக பக்கத்து வீட்டினர் செல்போன் மூலம் மாதவாவுக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து மாதவா பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.  பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குடியரசு மணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×