search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    போச்சம்பள்ளி பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

    போச்சம்பள்ளி பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    போச்சம்பள்ளி:

    மின்பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மேற்கொள்வதால் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், புலியூர் பாராண்டபள்ளி, படப்பெட்டி, கோட்டைப்பட்டி, பண்ணந்தூர், வடமங்கலம், மத்தூர், சிவம்பட்டி, அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசைகவுண்டனூர், புளியம்பட்டி, ஆப்பள்ளி, கண்ணன்ட அள்ளி, அத்திக்கானூர், பெருகோபனபள்ளி, ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுபட்டி, உப்பாரபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×