search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ஒரத்தநாடு அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

    ஒரத்தநாடு அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி (வயது 60) என்பவர் நடந்து சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்து தப்பி ஓடினர். இதேப்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்ற கல்லூரி பேராசிரிையியடம் 4 பவுன் செயினையும் மர்ம நபர்கள் பறித்தனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை மாதாக்கோட்டையை சேர்ந்த சின்னையன் (வயது 56) என்பதும், ஒரத்தநாடு பகுதிகளில் நடந்த 2 திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×