search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா கடத்தல்
    X
    கஞ்சா கடத்தல்

    திருவள்ளூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

    திருவள்ளூரில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரியகுப்பம் துளசி திரையரங்கம் அருகே கஞ்சா விற்ற பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த சுகுமார், முரளி, கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சாலிகிராமம் கே.கே. சாலையில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு உள்ள அறையில் மூட்டையில் குட்கா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பதுக்கிய அப்துல் ரகுமான், சாகுல் அமீது, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×