என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் மழை - மரங்கள் சாய்ந்தன
Byமாலை மலர்23 Nov 2019 5:16 PM GMT (Updated: 23 Nov 2019 5:16 PM GMT)
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் 10-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் ஊரணிகள் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டணம் காத்தான் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): கடலாடி 15, வாலிநோக்கம் 19, பள்ள மோர்க்குளம் 15, பரமக்குடி 9.80, மண்டபம் 14, ராமநாதபுரம் 42.50 பாம்பன் 18.20, ராமேசுவரம் 25.20, தங்கச்சிமடம் 16.50,, தீர்த்தாண்டதானம் 2, ஆர்.எஸ்.மங்கலம் 4 தொண்டி 10.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் ஊரணிகள் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டணம் காத்தான் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ரோட்டில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): கடலாடி 15, வாலிநோக்கம் 19, பள்ள மோர்க்குளம் 15, பரமக்குடி 9.80, மண்டபம் 14, ராமநாதபுரம் 42.50 பாம்பன் 18.20, ராமேசுவரம் 25.20, தங்கச்சிமடம் 16.50,, தீர்த்தாண்டதானம் 2, ஆர்.எஸ்.மங்கலம் 4 தொண்டி 10.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X