என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்23 Nov 2019 10:16 AM GMT (Updated: 23 Nov 2019 10:16 AM GMT)
கோவையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 43 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் நடேசன் (வயது 43). இவர் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல நடேசன் வேலைக்கு சென்று விட்டார். இவர் அந்த பகுதியில் உள்ள பக்கத்து வீதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
மதியம் வீட்டில் இருந்த இவரது தந்தை வெங்கடசாமி வீட்டை பூட்டி விட்டு கட்டுமான பணி நடந்து வரும் புதிய வீட்டிற்கு சென்று இருந்தார்.
அப்போது நடேசன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 43 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மாலையில் வீட்டுக்கு திரும்பிய நடேசன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிக்கொண்டு சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த 2 மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 43 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் நடேசன் (வயது 43). இவர் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல நடேசன் வேலைக்கு சென்று விட்டார். இவர் அந்த பகுதியில் உள்ள பக்கத்து வீதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
மதியம் வீட்டில் இருந்த இவரது தந்தை வெங்கடசாமி வீட்டை பூட்டி விட்டு கட்டுமான பணி நடந்து வரும் புதிய வீட்டிற்கு சென்று இருந்தார்.
அப்போது நடேசன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 43 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மாலையில் வீட்டுக்கு திரும்பிய நடேசன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிக்கொண்டு சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த 2 மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 43 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X