search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கொள்ளை"

    • சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளை குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத்(வயது55).

    இவர் கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மத்தியபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார்.

    அப்போது பிரசாத் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கேமிரா, வெள்ளி நாணயம், தங்க நாணயம், வைர கம்மல், மூக்குத்தி, வெள்ளி டம்ளர் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விஸ்கி, ஒயின் ஆகியவற்றை வாங்கி விட்டு மீண்டும் பிரசாத்தின் வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். மது குடிக்கும் போது சாப்பிடுவதற்காக வீட்டில் உள்ள பிரிட்ஜை திறந்து அதில் இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு மது குடித்தனர்.

    பின்னர் போதையில் படுத்து தூங்கி விட்டு போதை தெளிந்ததும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் தப்பிச் சென்றனர்.

    சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் கொள்ளையர் பயன்படுத்திய மதுபாட்டில் கிடப்பதை கண்டார். இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை காமராஜர் நகரை சேர்ந்தவர் யுவராஜ்(வயது41).

    இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபபிரியா.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யுவராஜ் குடும்பத்தினருக்கு ஜவுளி எடுக்க முடிவு செய்தார்.

    இதையடுத்து நேற்று யுவராஜ் தனது மனைவி தீப பிரியாவுடன் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதைபார்த்து பதறிபோன யுவராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உடனடியாக யுவராஜ் பீரோவில் நகை,பணம் இருக்கிறதா? என பார்த்தார்.

    அப்போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.

    இவர்கள் கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து யுவராஜ் காரமடை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, சுல்தான் இப்ராகிம், தனிப்பிரிவு காவலர் பிரவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கொள்ளை நடந்த வீடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஏதாவது கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன்.
    • அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து காண்பிக்குமாறு கூறினார். பெண் ஊழியரும் நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து காண்பித்தார்.

    இதற்கிடையே அந்த பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன். அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர், மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீரை எடுத்து வர உள்ளே சென்றார். அந்த சமயம் பார்த்து வாலிபர் 2 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கிய அந்த வாலிபரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சேசிங் ரவி(வயது40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு எங்காவது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×