search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வல்லம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் மரணம்

    வல்லம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி கீழ அம்பலக்காரதெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). இவர் சம்பவத்தன்று பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மாமரத்தில் சக்திவேல் மாங்காய் பறிப்பதற்காக ஏறி உள்ளார். அப்போது சக்திவேல் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது பற்றி இறந்த சக்திவேலின் தந்தை மூக்கையன் வல்லம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×