என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயபுரம் அருகே குப்பை லாரி மோதி போலீஸ்காரர் பலி
Byமாலை மலர்21 Nov 2019 7:38 AM GMT (Updated: 21 Nov 2019 7:38 AM GMT)
மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்த போலீசார்காரர் மீது குப்பை லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ராயபுரம்:
சென்னை, எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு மற்றும் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பழனிக்குமார். இவர் மவுண்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று நள்ளிரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
முல்லைநகர் பணிமனை அருகே எஸ்.எம்.நகர் பகுதியில் வந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது.
இதில் நிலை தடுமாறிய பழனிக்குமார் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த குப்பை லாரி பழனிக்குமார் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பழனிகுமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஆகும்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பை லாரி டிரைவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை பள்ளத்தால் போலீஸ்காரரின் உயிர் பறிபோய் உள்ளது. அந்த பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை, எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு மற்றும் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பழனிக்குமார். இவர் மவுண்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று நள்ளிரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
முல்லைநகர் பணிமனை அருகே எஸ்.எம்.நகர் பகுதியில் வந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது.
இதில் நிலை தடுமாறிய பழனிக்குமார் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த குப்பை லாரி பழனிக்குமார் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பழனிகுமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஆகும்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பை லாரி டிரைவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை பள்ளத்தால் போலீஸ்காரரின் உயிர் பறிபோய் உள்ளது. அந்த பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X