என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் - வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
Byமாலை மலர்20 Nov 2019 4:20 PM GMT (Updated: 20 Nov 2019 4:20 PM GMT)
குடவாசல் மற்றும் வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
குடவாசல்:
குடவாசல் மற்றும் வலங்கைமானில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 1,993 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை, எளிய மக்களை பாதுகாக்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் அனைத்து மக்களிடமும் பாராட்ட பெற்ற திட்டமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களை தேடி அரசு என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. ஒரு திட்டமென்றால் பெயரளவிற்கு இருந்து விடாமல் மக்களிடையே பெயர் சொல்கின்ற திட்டமாக இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியை பின்பற்றி மக்களிடையே பெயர் சொல்கின்ற பாராட்ட பெறுகின்ற முன்னோடி திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X