search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மதுரை பாண்டி கோவில் ரோட்டில் விபத்து: 9 வயது சிறுவன் பலி

    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 வயது சிறுவன் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ஆவியூர், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நவநீதன் (வயது 9).

    சம்பவத்தன்று மகனுடன் மதுரை வந்த ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் பாண்டி கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் நவநீதன், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்தப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதன் பரிதாபமாக இறந்தான். நாகராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×