என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை பாண்டி கோவில் ரோட்டில் விபத்து: 9 வயது சிறுவன் பலி
Byமாலை மலர்19 Nov 2019 10:53 AM GMT (Updated: 19 Nov 2019 10:53 AM GMT)
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 வயது சிறுவன் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம், ஆவியூர், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நவநீதன் (வயது 9).
சம்பவத்தன்று மகனுடன் மதுரை வந்த ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் பாண்டி கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் நவநீதன், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்தப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதன் பரிதாபமாக இறந்தான். நாகராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X