என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் மயங்கி விழுந்து பலி
கோவை:
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 39). கோவை ரெயில் வேயில் ஏ.சி. மெக்கானிக்காக இருந்தார். இவரது மனைவி வித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவை ரெயில் நிலையத்தில் வழக்கம்போல் பணிக்கு வந்தார்.
வாட்டர் பிளானட் அருகில் உள்ள ஏ1 பிளாட்பாரத்தில் அமர்ந்தார். பின்னர் திடீரென மயங்கி விழுந்தார். வெகுநேரம் விழுந்தே கிடந்தார். அந்த வழியாக சென்ற பயணிகள் அவர் தூங்கிக்கொண்டுள்ளார் என்று நினைத்தனர். வெகுநேரமானதால் சந்தேகமடைந்தசில பயணிகள் பார்த்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குள்ள டாக்டருடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மதுசூதனனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்