என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருமத்தூர் அருகே மழையால் சுவர் இடிந்து மூதாட்டி பலி
Byமாலை மலர்31 Oct 2019 3:04 PM GMT (Updated: 31 Oct 2019 3:04 PM GMT)
இருமத்தூர் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட இருமத்தூர் அடுத்த கொன்றம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமலா (வயது 68).
கணவரை இழந்த இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார். இவருக்கு முருகன் (45) என்ற மகன் உள்ளார். அவர் நாகரசம்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக விமலா வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வி.ஏ.ஓ. மகாலிங்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X