என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே மணக்கோலத்தில் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
வல்லம்:
தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன்(வயது30). தஞ்சை அருகே உள்ள நாகத்தியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகள் ஜெயலட்சுமி(23). பால்ராஜ் இறந்து விட்டார். ஜெயலட்சுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
ஜெயலட்சுமி, ஸ்டீபன் இருவரும் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயலட்சுமியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காதலர்கள் நேற்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மணக்கோலத்தில் இருவரும் வந்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து ஜெயலட்சுமி யின் தாயாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஜெயலட்சுமியின் வீட்டில் இருந்து யாரும் போலீஸ் நிலையம் வராததால் ஜெயலட்சுமி, ஸ்டீபன் ஆகியோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்