search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தகுமார் எம்.பி.
    X
    வசந்தகுமார் எம்.பி.

    நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வசந்தகுமார் எம்.பி. இன்று தூத்துக்குடி வந்தார். இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு 3-ம் மைலில் உள்ள அவரது சிலைக்கு வசந்தகுமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ்


    நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தான் ஓட்டு போட நினைத்தார்கள். ஆனால் அரசின் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் அன்று அமைச்சர்கள் வாக்கு மையத்தில் இருந்து வாக்களிக்க வந்தவர்களிடம் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாலும் மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இடைத்தேர்தல் தானே என்று தான் பொதுமக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து உள்ளனர். மீண்டும் காங்கிரஸ் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×