search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசந்தகுமார்"

    நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருப்பதால் எச்.வசந்த குமார் ஏற்கெனவே வகித்து வந்த எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரை சந்தித்து, எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 
    பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

    கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தகுமார் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்றார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை காட்டிலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து வசந்தகுமாருக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் வடநேரே வெற்றி சான்றிதழை வழங்கினார். பின்னர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவித்த ராகுல்காந்திக்கும், என்னை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து செய்த சேவைகளை சமுதாய பணிகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    எனது முதல் பணி குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். தேனி ஆராய்ச்சி, ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன். இது தொடர்பாக ஏற்கனவே சில நிறுவனங்களிடம் நான் பேசி உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையவில்லை என்ற போதும் அது எனது மக்கள் பணியை பாதிக்காது.

    குமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவேன். மத்திய அமைச்சராக இருந்தவர் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே சமயத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எனக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது இல்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    இது தமிழகத்தில் எதிரொலித்திருக்கிறது. காங்கிரஸ் பின்னடைவிற்கு என்ன காரணம் என்பதை அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தி இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியிலும் தற்போது மோதல் வெடித்துள்ளது. பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி தயாராக இருந்து வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அந்த வகையில் பா.ஜ.க. இரண்டாக உடையலாம் என்று கருத்து உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட தமிழக விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. மோடி, பா.ஜ.க.வுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் பிரதமர், தமிழக நலன் கருதி மத்திய அரசு செயல்படும் என்று கருதுகிறோம். தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் லட்சுமணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 2-வது இடத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. கன்னியாகுமரி தொகுதியில் 2 வாக்கு எந்திரங்களை திறக்க முடியாததால் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
    கன்னியாகுமரி தொகுதியில் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் இன்று நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், தில்லை செல்வம், மகேஷ், கூட்டணி கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல், சிலம்பு சுரேஷ், வெற்றிவேந்தன், அன்வர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த நேரமும் தலைவர்களும், தொண்டர்களும் இங்கு வந்து என்னை சந்திக்கலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். 6 சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள நானும் சேர்ந்து குமரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஒருங்கிணைந்த துறைமுகம் கொண்டு வரப்படும். பெரிய துறைமுகம் அமைய 587 ஏக்கர் நிலமும், சிறிய துறைமுகம் அமைய 350 ஏக்கர் நிலமும் தேவை. நாம் ஏற்கனவே உள்ள துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் கொண்டு வர வேண்டும்.

    ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயார் என்கிறார். நானும் விவாதத்துக்கு தயார். ஆனால் அதற்கு முன்பு எனது 3 கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். அதுபற்றி பாராளுமன்றத்தில் அவர் பேசவில்லை. சிறப்பு தீர்மானமும் கொண்டு வரவில்லை. அதற்கு அவர் என்ன முயற்சி செய்தார்? மோடி அரசு ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறியது. எத்தனை பேரின் கணக்கில் இந்த பணம் போடப்பட்டுள்ளது.

    2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். எத்தனை பேருக்கு வேலை வழங்கி உள்ளனர். இந்த 3 கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தால் நான் விவாதிக்கத் தயார். குமரி மாவட்டத்தில் சாய்-சப் சென்டர், விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. விமான நிலையத்தை கூடங்குளத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை. எனது நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்கள் நிறுவனத்தில் 2500 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த என்னை வெளிநாட்டு பறவை என்கிறார். என்னை வெளிநாட்டு பறவை என்றால் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எங்கிருந்து வந்தவர்? எனது ஓட்டு கூட இங்கு தான் உள்ளது. தோல்வி பயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு பேசுகிறார். நான் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி மற்றும் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.

    துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது, அவரை மிரட்டவும், பழி வாங்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 பாலங்கள் கட்டியதே சாதனை என்கிறார். இந்த 3 ஆண்டுகளில் நாங்குநேரி தொகுதியில் நான் பல சாதனைகளை செய்துள்ளேன். தூத்துக்குடி, சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்குகிறது. தனிநபருக்காக இங்கு துறைமுக திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சியை தடுப்பதாக கூறுகிறார். அவர்கள் மாவட்டத்துக்கு வரும் அழிவை தான் தடுக்கிறார்கள். மணவாளக்குறிச்சி மணல் ஆலையை கூட இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். தோல்வி பயத்தால் மாற்றி, மாற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar

    மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று காங். வேட்பாளர் வசந்தகுமார் பேசியுள்ளார். #Congress #pmmodi #vasanthakumar

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுசீந்திரத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது வசந்தகுமார் பேசியதாவது:-

    கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் எனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வதுடன் ராகுல்காந்தி பிரதமராவதற்கு துணை நிற்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டாம் என்று நான் கூறியதாக பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். நானும் ஒரு தொழில் செய்து வருபவன். தொழிற்சாலை இருந்தால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொன். ராதாகிருஷ்ணன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குவேன் என்று பொய்யான வாக்கு றுதிகளை கூறி வெற்றி பெற்றார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    ஆனால் நான், சமீப காலத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 1,500 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். மக்களுக்காகவே அரசாங்கம் இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது. மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கற்காடு, மருங்கூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அசோகன் சாலமன், கால பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #Congress #pmmodi #vasanthakumar

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடி என்றும், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7 கோடி என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.

    அசையும் சொத்தாக ரூ.50 லட்சத்து 56 ஆயிரத்து 298, அசையா சொத்தாக ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளது என்றும் அவர், தனது வேட்பு மனுவில் கூறி உள்ளார். மேலும் கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் ரூ.417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 சொத்து உள்ளது.

    அசையும் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302-ம், அசையா சொத்துக்களாக ரூ.181 கோடி 95 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், பரம்பரை சொத்தாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    வசந்தகுமாரின் மனைவி பெயரில் அசையும் சொத்தாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரத்து 142-ம், அசையா சொத்தாக ரூ.4 கோடி 75 லட்சமும் உள்ளது.

    மேலும் தனது பெயரில் வங்கி கடனாக ரூ.154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 இருப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 689 இருப்பதாகவும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.



    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    ×