search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை
    X

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் லட்சுமணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 2-வது இடத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. கன்னியாகுமரி தொகுதியில் 2 வாக்கு எந்திரங்களை திறக்க முடியாததால் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
    Next Story
    ×