search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களை வஞ்சிக்கின்ற மோடி அரசு மாற்றப்பட வேண்டும்- காங். வேட்பாளர் வசந்தகுமார் பேச்சு
    X

    மக்களை வஞ்சிக்கின்ற மோடி அரசு மாற்றப்பட வேண்டும்- காங். வேட்பாளர் வசந்தகுமார் பேச்சு

    மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று காங். வேட்பாளர் வசந்தகுமார் பேசியுள்ளார். #Congress #pmmodi #vasanthakumar

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுசீந்திரத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது வசந்தகுமார் பேசியதாவது:-

    கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் எனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வதுடன் ராகுல்காந்தி பிரதமராவதற்கு துணை நிற்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டாம் என்று நான் கூறியதாக பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். நானும் ஒரு தொழில் செய்து வருபவன். தொழிற்சாலை இருந்தால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொன். ராதாகிருஷ்ணன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குவேன் என்று பொய்யான வாக்கு றுதிகளை கூறி வெற்றி பெற்றார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    ஆனால் நான், சமீப காலத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 1,500 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். மக்களுக்காகவே அரசாங்கம் இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது. மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கற்காடு, மருங்கூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அசோகன் சாலமன், கால பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #Congress #pmmodi #vasanthakumar

    Next Story
    ×