search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே செல்போன் திருடியவர் கைது

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள ரேகடஅள்ளி அருகே ஜாலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (வயது 29) குண்டல்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் மேனாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இவரது 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் சார்ஜ் போட்டுவிட்டு, பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் போடவந்த மர்மநபர் ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக அலுவலகத்தின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் அந்த மர்மநபர் மணிகண்டனின் செல்போனை எடுத்துக் கொண்டு வாகனத்தில் தப்பித்துவிட்டார். இதை அறிந்த அங்கிருந்தவர்கள் அந்த மர்மநபரை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து மணிகண்டன் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்போனை திருடியவர் தருமபுரி ரங்கா நகரை சேர்ந்த அப்துல்ரசிமன் (32) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அப்துல் ரசிமனை கைது செய்தனர்.
    Next Story
    ×