என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே செல்போன் திருடியவர் கைது
Byமாலை மலர்21 Oct 2019 4:36 PM GMT (Updated: 21 Oct 2019 4:36 PM GMT)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள ரேகடஅள்ளி அருகே ஜாலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (வயது 29) குண்டல்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் மேனாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இவரது 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் சார்ஜ் போட்டுவிட்டு, பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் போடவந்த மர்மநபர் ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக அலுவலகத்தின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் அந்த மர்மநபர் மணிகண்டனின் செல்போனை எடுத்துக் கொண்டு வாகனத்தில் தப்பித்துவிட்டார். இதை அறிந்த அங்கிருந்தவர்கள் அந்த மர்மநபரை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து மணிகண்டன் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்போனை திருடியவர் தருமபுரி ரங்கா நகரை சேர்ந்த அப்துல்ரசிமன் (32) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அப்துல் ரசிமனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X