என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் முன்னாள் ராணுவ வீரரின் மகன் காரில் கடத்தல்
Byமாலை மலர்20 Oct 2019 4:53 PM GMT (Updated: 20 Oct 2019 4:53 PM GMT)
மதுரையில் ரூ. 10 லட்சம் கேட்டு முன்னாள் ராணுவ வீரரின் மகன் காரில் கடத்தப்பட்டதாக தெரிகிறது. போலீசார் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் பார்த்திபன் (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பார்த்திபனின் பெற்றோருக்கு மர்ம கும்பல் போனில் பேசி உங்கள் மகனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X