search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மதுரையில் முன்னாள் ராணுவ வீரரின் மகன் காரில் கடத்தல்

    மதுரையில் ரூ. 10 லட்சம் கேட்டு முன்னாள் ராணுவ வீரரின் மகன் காரில் கடத்தப்பட்டதாக தெரிகிறது. போலீசார் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் பார்த்திபன் (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பார்த்திபனின் பெற்றோருக்கு மர்ம கும்பல் போனில் பேசி உங்கள் மகனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 10 லட்சம் வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய  கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×