என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா?- தஞ்சையில் போலீசார் சோதனை
Byமாலை மலர்17 Oct 2019 5:25 PM GMT (Updated: 17 Oct 2019 5:25 PM GMT)
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தஞ்சையில் ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:
ரெயில்களில் தீவிபத்தை ஏற்படுத்தும் பட்டாசு, வெடிபொருட்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பயணிகள் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்பதால் தஞ்சை வழியாக செல்லும் ரெயில்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அப்போது தடையை மீறி பயணிகள் பட்டாசு, வெடிபொருட்களை ரெயிலில் கொண்டு செல்கிறார்களா? என சோதனை செய்தனர். தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களிலும் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். பயணிகள் உடைமைகளை நவீன கருவிகள் கொண்டு சோதித்தனர்.
மேலும் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X