என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செல்போன், கஞ்சா பதுக்கலா? புழல் சிறையில் திடீர் சோதனை
செங்குன்றம்:
புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் பெண் கைதிகளுக்கு என தனித்தனி ஜெயில்கள் உள்ளன. அவற்றில் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
தண்டனை சிறையில் 700-க் கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 180-க்கும் மேற்பட்டோரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு உள்ள கைதிகள் செல்போன்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன் படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து இன்று காலை மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவளி பிரியா தலைமையில் புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில், உதவி கமிஷனர்கள் ராமலிங்கம், ரவி, ஜெயில் சூப்பிரண்டுகள் செந்தாமரை கண்ணன், செந்தில் குமார், இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ஆனந்த, வசந்தன், தங்கதுரை மற்றும் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் 59 போலீசார் ஈடுபட்டனர்.
அவர்கள் புழல் சிறையில் காலை 6 மணிமுதல் 9 மணி வரை சோதனை நடத்தினர். ஆனால் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட எதுவும் சிக்க வில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்