search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    செய்யாறு அருகே 10-ம் வகுப்பு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு அடுத்த வடமணப்பாக்கத்தை சேர்ந்தவர் சம்பத், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சுவேதா (16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் கடந்த 2 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதியடைந்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் சுவேதாவை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த சுவேதா நேற்று முன்தினம் அம்மணந்தல் ஏரிக்கரைக்கு சென்று அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

    இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சுவேதாவை மீட்ட அவர்கள் பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுவேதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×