search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொன்னேரி அருகே குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

    பொன்னேரி அருகே குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த புலிக்குளத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 30). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையும் வழக்கம் போல் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த சண்முகமும், லட்சுமியும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இருவரும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினர்.

    அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமியை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×