என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்- உறவினர் மீது புகார்
Byமாலை மலர்6 Oct 2019 12:41 PM GMT (Updated: 6 Oct 2019 12:41 PM GMT)
புதுவையில் கல்லூரிக்கு சென்ற மாணவியை உறவினர் கடத்தி சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வழுதாவூர் ரோடு சொக்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் மகாலட்சுமி (வயது17). இவர் புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகரில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை மகாலட்சுமி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து மாலையில் மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் மகாலட்சுமி இல்லை.
இதையடுத்து வெங்கடேசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் காரைக்காலை சேர்ந்த உறவினர் மகனான மரியசார்லி என்பவர் தனது மகள் மகாலட்சுமியை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து மகாலட்சுமியை கடத்தி சென்ற மரியசார்லியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X