search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி கடத்தல்"

    • கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • வாலிபர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கமலேசன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் அருணா (வயது22).

    இவர் காரிமங்கலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    பின்னர் வெகுநேரம் ஆகியும் மாணவி அருணா வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் எனது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கொட்டாவூரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பொன்னுவேல் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னவாசல் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.  இவரது மகள் பிரீத்தா (வயது18). இவர் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவர் கல்லூரி விடுமுறைக்கு சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது தாயுடன் கல்லூரி விடுதிக்கு வந்தார்.  

    பின்னர் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மாலை விடுதிக்கு விரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி விடுதிகாப்பாளர் ராஜேந்திரன் பிரீத்தாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். 

    இதனையடுத்து பிரீத்தாவின் தந்தை வெங்கடாசலம் அன்னவாசல் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தர்மபுரியை சேர்ந்த தேசிங்கு என்பவர் பிரீத்தியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    மதுரை அருகே கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரை சேர்ந்தவர் சின்னழகன். இவரது மகள் பாண்டிமீனா (வயது 19). கல்லூரி மாணவி.

    இவர் அழகர்நாயக்கன் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்வதற்காக அய்யூர் புறப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பாண்டிமீனாவை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வருகிறார்கள்.

    ×