search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang kidnapped"

    தேனி அருகே கல்லூரி மாணவியை கடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே சங்க கோணான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவணான்டி. இவரது மகள் கிருத்திகா. இவர் தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றுள்ளார்.

    வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவணான்டி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் பெரியபாண்டி மகன் பார்த்திபன் (வயது29), சிவக்குமார் மகன் சத்யா(33), ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் இந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தேனி அருகே டொம்புச்சேரி பிள்ளைமார்சாவடியை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகப்பிரியா(17). ராசு தனது குடும்பத்தினருடம் கோவையில் வசித்து வருகிறார். விசே‌ஷத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது சிறுமி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றுள்ளார். அதிக நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் வேல்முருகன் பழனிசெட்டிபட்டி போலீசில் வருசநாடு பவளநகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் சுரேஷ் என்பவர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச் சென்ற சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×