என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்
Byமாலை மலர்5 Oct 2019 1:26 AM GMT (Updated: 5 Oct 2019 1:26 AM GMT)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி நாங்குநேரியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள்.
இந்தநிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து வருகிற 13, 14 மற்றும் 17-ந்தேதிகளிலும், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து 15, 16 மற்றும் 18-ந்தேதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி நாங்குநேரியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள்.
இந்தநிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து வருகிற 13, 14 மற்றும் 17-ந்தேதிகளிலும், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து 15, 16 மற்றும் 18-ந்தேதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X