என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: கணவன்-மனைவிக்கு வலைவீச்சு
Byமாலை மலர்3 Oct 2019 2:04 PM GMT (Updated: 3 Oct 2019 2:04 PM GMT)
ஒரத்தநாடு அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்தவர் பாபு. இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி(வயது38) தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பாபுவின் சித்தப்பா இளங்கிள்ளி குடும்பத்துக்கும். பாபுவின் குடும்பத்துக்கும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தாமரைச்செல்வி குழந்தைகளுடன் தனியே இருந்துள்ளார். அப்போது இளங்கிள்ளியின் மகன் ராஜராஜன்(45), இவரது மனைவி வினோதினி(40) ஆகிய இருவரும் அங்கு வந்து தாமரைச்செல்வியுடன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தாமரைச்செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுபற்றி தாமரைச்செல்வி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜராஜன், அவரது மனைவி வினோதினி ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X