என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் ஓடும் பஸ்சில் ரூ.44 லட்சம் நகை அபேஸ்
கோவை:
கோவை செட்டிவீதி அய்யப்பா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் அதே பகுதியில் முரளிநரசிம்மன் என்பவர் நடத்தி வரும் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
இங்கு தயாரிக்கப்படும் நகைகளை முரளி கர்நாடகம் மற்றும் வெளியூர்களில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்து வழக்கம். கடந்த 24-ந்தேதி ஆபரண தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கர்நாடக மாநிலத்துக்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்டார்.
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்தார்.
பின்னர் மீதமுள்ள செயின், நெக்லஸ், வளையல் உள்ளிட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகளை பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.
இன்று காலை (29-ந்தேதி) கோவை பஸ் நிலையம் வந்து நகை பையை திறந்து பார்த்தபோது ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் அனைத்தும் மாயமாகி விட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஓடும் பஸ்சில் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முரளி நகை பட்டறை உரிமையாளருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்தவர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்