என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரியில் ஓட்டல் உரிமையாளரிடம் வழிப்பறி- 2 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்26 Sep 2019 2:39 PM GMT (Updated: 26 Sep 2019 2:39 PM GMT)
நாங்குநேரியில் ஓட்டல் உரிமையாளரிடம் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
களக்காடு:
நாங்குநேரி கீழரதவீதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 52). இவர் நாங்குநேரி பஸ் நிலையம் அருகே ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது ஓட்டலுக்கு வந்த மருகால்குறிச்சியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் வேல்முருகன், நாங்குநேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஐகோர்ட் ஆகியோர் அவரிடம் செலவுக்கு ரூ.1000 தருமாறு கேட்டனர்.
அதற்கு சுடலைக்கண்ணு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி அவர் கையில் அணிந்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச்சை பறித்து சென்று விட்டனர்.
இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வேல்முருகன், ஐகோர்ட் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X