search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விருகம்பாக்கம் பகுதியில் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

    விருகம்பாக்கம் பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    விருகம்பாக்கம் ஷேக்மான்யம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 21-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஆற்காடு சாலையில் முத்துக்குமார் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முத்துக்குமாரின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ், ஆனந்த் என்பது தெரிந்தது.

    2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அதிகாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்களை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களில் மட்டும் வளசரவாக்கம், கே.கே.நகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அடுத் தடுத்து செல்போன் பறித்து சென்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கனவே கோயம்பேடு, மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது.
    Next Story
    ×