search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூர் அருகே தாய், மகனுக்கு கொலை மிரட்டல் - 2 பேர் கைது

    வில்லியனூரில் தாய் மற்றும் மகனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள துரையூர் வல்லுவன்பேட்டையை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சதீஷ் (வயது 31). இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதனையொட்டி அவரது நண்பர்களான முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்த ராஜசேகர், துரையூரை சேர்ந்த பாலசந்தர் ஆகியோர் பிறந்த நாள் பார்ட்டி கேட்டுள்ளனர்.

    அதற்கு மறுப்பு தெரிவித்த சதீஷ் அவர்களுடன் வாக்குவத்தில் ஈடுபட்டு அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் சதீஷின் வீட்டின் கதவை உடைத்து உள்னே சென்றனர். பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர் மேலும் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து சதீஷின் தாய் பூங்கோதை வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பாலசந்தர்,ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×