என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2019 6:15 PM GMT (Updated: 24 Sep 2019 6:15 PM GMT)
வரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி:
தூசி அருகே உள்ள சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது 2-வது மகள் மணிமேகலைக்கும் (வயது 23) திருப்பணமூர் கிராமம் மேட்டு காலனியை சேர்ந்த நளசக்கரவர்த்தி என்பவர் மகன் மனோவுக்கும் (25) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
மணிமேகலையிடம் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை கடந்த 21-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சாந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
தூசி அருகே உள்ள சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது 2-வது மகள் மணிமேகலைக்கும் (வயது 23) திருப்பணமூர் கிராமம் மேட்டு காலனியை சேர்ந்த நளசக்கரவர்த்தி என்பவர் மகன் மனோவுக்கும் (25) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
மணிமேகலையிடம் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை கடந்த 21-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சாந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X