search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    வரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தூசி:

    தூசி அருகே உள்ள சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது 2-வது மகள் மணிமேகலைக்கும் (வயது 23) திருப்பணமூர் கிராமம் மேட்டு காலனியை சேர்ந்த நளசக்கரவர்த்தி என்பவர் மகன் மனோவுக்கும் (25) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

    மணிமேகலையிடம் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை கடந்த 21-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை சாந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×