என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே மனைவியின் தாலியை பறித்து கொலை மிரட்டல் விடுத்த கணவர்
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமி புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியின் தாலி செயினை அறுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதை தட்டிக் கேட்ட சரண்யாவின் தந்தை செல்வரஜையும் தாக்கி மிரட்டினார்.
இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள தென்கரை மகாதேவன் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் பாண்டியராஜன். இவரது தங்கைக்கும் ராஜயோகபாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்து தனியாக வசித்து வந்தனர். சம்பவத்தன்று ராஜயோகபண்டி உறவினர் வெங்கடேசன் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள கார் கண்ணாடியை உடைத்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த ராஜயோகபாண்டி சம்பவத்தன்று தனது மனைவி முத்துலெட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்