என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ. 6 லட்சம் திருட்டு
Byமாலை மலர்19 Sep 2019 3:08 PM GMT (Updated: 19 Sep 2019 3:08 PM GMT)
களக்காட்டில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ. 6 லட்சம் பணத்தை திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு வியாசராஜ புரத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 49) களக்காடு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் தனது வீட்டு சமையல் அறையில் உள்ள பாத்திரத்தில் ரூ. 6 லட்சம் பணம் வைத்திருந்தார். சம்பவத்தன்று பணத்தை எடுப்பதற்காக பாத்திரத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்தார்.
புகாரில் கடந்த 22-ந் தேதி தனது தம்பி வீட்டில் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக அவரது எதிர்வீட்டை சேர்ந்த செய்யது அலி முத்துமீராள் என்பவர் பாத்திரங்கள் எடுக்க வந்தார். அவர் மீது சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குபதிவு செய்து செய்யது அலி முத்துமீராளை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X