search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கைது
    X
    பெண் கைது

    களக்காட்டில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ. 6 லட்சம் திருட்டு

    களக்காட்டில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ. 6 லட்சம் பணத்தை திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு வியாசராஜ புரத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 49) களக்காடு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் தனது வீட்டு சமையல் அறையில் உள்ள பாத்திரத்தில் ரூ. 6 லட்சம் பணம் வைத்திருந்தார். சம்பவத்தன்று பணத்தை எடுப்பதற்காக பாத்திரத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்தார். 

    புகாரில் கடந்த 22-ந் தேதி தனது தம்பி வீட்டில் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக அவரது எதிர்வீட்டை சேர்ந்த செய்யது அலி முத்துமீராள் என்பவர் பாத்திரங்கள் எடுக்க வந்தார். அவர் மீது சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குபதிவு செய்து செய்யது அலி முத்துமீராளை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×