search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    நாங்குநேரி அருகே நெல்லை கல்லூரி மாணவி கடத்தல்?: அண்ணன்-தம்பி மீது போலீசில் புகார்

    நெல்லை கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மாவடி பகுதியை சேர்ந்த ஒருவரது 17 வயது மகள்,  நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் நாங்குநேரி அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி காலை உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மாணவி புறப்பட்டு சென்றார். பாணாங்குளத்தில் இருந்து நெல்லைக்கு பஸ்சில் சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. 

    இதையடுத்து மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை களக்காடு அருகே உள்ள எஸ்.என். பள்ளிவாசலை சேர்ந்த பஞ்சுதுரை மகன் விஷ்வந்த் மற்றும் அவரது அண்ணன் நவீன் ஆகியோர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் மூன்றடைப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×