என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சல் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்18 Sep 2019 10:34 AM GMT (Updated: 18 Sep 2019 10:47 AM GMT)
குளச்சல் அருகே 17 வயது மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:
கருங்கல் அருகே உள்ள சுண்டவிளையைச் சேர்ந்தவர் விஜயன்(20). இவர் அந்த பகுதியில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய பெண் தவறுதலாக அவரது செல்போனுக்கு பேசி விட்டதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பிறகு அந்த செல்போன் நம்பருக்கு விஜயன் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசத் தொடங்கினார். அப்போது அந்த பெண் குளச்சல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது.
முதலில் நட்பாக பேசிய விஜயன் அதன் பிறகு அந்த மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். அவரது பேச்சில் மயங்கிய மாணவியும் அவரை காதலிக்கத் தொடங்கினார்.
கடந்த 30-ந்தேதி அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். மேலும் அந்த வாலிபரும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியையும், வாலிபரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மாணவியும், வாலிபரும் கோவையில் பதுங்கி இருக் கும் தகவல் மாணவியின் உறவினர்களுக்கு கிடைத்தது.
செலவுக்கு பணம் இல்லாததால் அந்த வாலிபர் தனது நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு பண உதவி கேட்டதும் அவர்களுக்கு தெரிய வந்தது. இது பற்றி குளச்சல் போலீசில் அவர்கள் தெரிவித்தனர்.
குளச்சல் போலீசாருடன் உறவினர்கள் கோவைக்கு மாணவியை தேடிச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்த மாணவியையும், வாலிபரையும் கோவை போலீசார் உதவியுடன் மீட்டனர். பிறகு அவர்கள் இருவரையும் குளச்சலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மாணவியை, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் வாலிபர் விஜயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கருங்கல் அருகே உள்ள சுண்டவிளையைச் சேர்ந்தவர் விஜயன்(20). இவர் அந்த பகுதியில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய பெண் தவறுதலாக அவரது செல்போனுக்கு பேசி விட்டதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பிறகு அந்த செல்போன் நம்பருக்கு விஜயன் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசத் தொடங்கினார். அப்போது அந்த பெண் குளச்சல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது.
முதலில் நட்பாக பேசிய விஜயன் அதன் பிறகு அந்த மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். அவரது பேச்சில் மயங்கிய மாணவியும் அவரை காதலிக்கத் தொடங்கினார்.
கடந்த 30-ந்தேதி அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். மேலும் அந்த வாலிபரும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியையும், வாலிபரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மாணவியும், வாலிபரும் கோவையில் பதுங்கி இருக் கும் தகவல் மாணவியின் உறவினர்களுக்கு கிடைத்தது.
செலவுக்கு பணம் இல்லாததால் அந்த வாலிபர் தனது நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு பண உதவி கேட்டதும் அவர்களுக்கு தெரிய வந்தது. இது பற்றி குளச்சல் போலீசில் அவர்கள் தெரிவித்தனர்.
குளச்சல் போலீசாருடன் உறவினர்கள் கோவைக்கு மாணவியை தேடிச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்த மாணவியையும், வாலிபரையும் கோவை போலீசார் உதவியுடன் மீட்டனர். பிறகு அவர்கள் இருவரையும் குளச்சலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மாணவியை, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் வாலிபர் விஜயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X