என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளோம் - கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இறுதி முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
எனவே எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டுறவு சங்க தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துக்குள் கூட்டுறவு சங்க மாநில நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்போதும் சர்ச்சைக் குரிய கருத்துகளையே தெரிவிப்பார். தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதியும் தந்து, பாதுகாப்பும் வழங்குகின்றனர்.
நாம் தமிழகத்தில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசி உள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை அ.தி.மு.க. அரசு பெற்று தந்தது. மேலும் தமிழ் மொழியை பாதுகாக்கும் அரசாகவும் உள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு சிறப்பான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்