என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
மதுரை:
மதுரை செக்கானூரணி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகன் தினேஷ் (வயது19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ துணைப்படிப்பு (டி.பார்ம்) படித்து வந்தார்.
இன்று அவரது தாய்மாமாவுக்கு சோழவந்தான் அருகே உள்ள காடுப்பட்டி வைகை ஆற்று தடுப்பணை பகுதியில் திதி கொடுக்கப்பட்டது. இதில் தினேஷ் கலந்து கொண்டார்.
சடங்குகள் முடிந்த பின் தினேஷ் தனது உறவினர்களுடன் தடுப்பணை பகுதியில் தேங்கி இருந்த நீரில் பிண்டத்தை கரைக்க சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தினேஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து காடுப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தினேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் வரை அவரது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. அவர் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்