என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பனந்தாள் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்13 Sep 2019 8:54 AM GMT (Updated: 13 Sep 2019 8:54 AM GMT)
திருப்பனந்தாள் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சீர்காழியில் உள்ள தமது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பினார்.
நேற்று மாலை திருக்கோடிக் காவல் சாலை திருப்பத்தில் வந்தபோது குறுக்கே நாய் வந்ததால் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் சுமன், அவரது தாயார் உமா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X