search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வி‌‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை

    பெரம்பலூர் அருகே வி‌‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வன்னிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனம் உடைந்த நடராஜன் கடந்த 5-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி மருந்தை (வி‌‌ஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை தற்செயலாக பார்த்த, அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நடராஜன் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×