search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பழனியில் நில அளவையர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    பழனியில் நில அளவையர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடி சென்றனர்.

    பழனி:

    பழனி புதுநகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 60). இவர் நில அளவையராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி இவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மதுரை சென்றார்.

    இந்நிலையில் நேற்று காலை முருகானந்தத்தின் அக்கா கோமதி என்பவர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக முருகானந்தத்துக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் பழனிக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்து 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவை காணவில்லை.

    ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகானந்தம் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர். இதற்கிடையே தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பூட்டியிருக்கும், ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பழனி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் திருட்டு சம்பவம் அரங்கேறியது. எனவே பூட்டி கிடக்கும் வீடுகளில் நோட்டமிட்டு திருடி வரும் திருடர்களை பிடிக்க சம்பந்தப்பட்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×