என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற டிரைவர் காருடன் மாயம்
போரூர்:
அசோக் நகர் 35-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். கார் வாடகைக்கு கொடுத்து வந்தார். இவர் அசோக் நகர் உதவி கமிஷனர் ராதா கிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த நாகநாதன் என்பவர் கடந்த 10 வருடங்களாக என்னிடம் தங்கி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மூலம் குரோம்பேட்டையில் இருந்து வாடிக்கையாளர்கள் 2 பேரை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சி மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றார்.
7-ந்தேதி செல்போனில் என்னை தொடர்பு கொண்ட நாகநாதன் 8-ந்தேதி சென்னைக்கு வந்து விடுவதாக கூறினார். ஆனால் 8-ந்தேதி காலை அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது. காருடன் மாயமான நாகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து காரை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்