என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
குள்ளனம்பட்டி:
மதுரை அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவர் திண்டுக்கல் கொட்டபட்டி அருகே தனியார் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி யுவராணி (வயது 53) .நேற்று இவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது நிறுவனத்திற்கு வருவதற்காக மதுரையிலிருந்து பஸ் மூலம் திண்டுக்கல் நோக்கி வந்து பழனி பைபாஸ் சாலையில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து கொட்டபட்டி சாலையில் உள்ள அவரது நிறுவனத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராணி கூச்சல் போட்டார் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் யுவராணி புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வேல்முருகன், அழகுபாண்டி தலைமையிலான போலீசார் நகையை பறித்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்