search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமணமான 7 மாதத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்

    திருமணமான 7 மாதத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருக்கும் வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 11 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு வினோதினியை பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கொடுமைப்படுத்த தொடங்கினர்.

    தனிக்குடித்தனம் போக வினோதினி தனது கணவரிடம் கூறினார். அவ்வாறு செல்ல வேண்டுமானால் ரூ.1 லட்சம் வாங்கி வருமாறு அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

    இது குறித்து வினோதினி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பாலசுப்பிரமணி, மாமனார் சவுந்தரராஜன், மாமியார் இந்திராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×