என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணம் பிடிக்காததால் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
போரூர்:
கோயம்பேடு சின்மயா நகர் குலசேகரபுரம் வேதா சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் பிரியங்கா. இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தனர். வருகிற 9-ந்தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வந்தனர். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பிரியங்கா நேற்று மாலை பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் இரவு படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். அவர் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராமகிருஷ்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பிரியங்கா மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் பிரியங்கா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்