search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா கடத்தல்
    X
    கஞ்சா கடத்தல்

    திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கிய 5 கிலோ கஞ்சா பறிமுதல்

    திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கிய 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் தனிப்படை போலீசார் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீடு பூட்டியிருந்ததால் பூட்டை உடைத்து வீட்டில் சோதனையிட்டனர். அந்த வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கஞ்சா வியாபாரிகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் சிறப்பு காவல் படை பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×