search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
    X
    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

    அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு

    அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    2,500 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக செப்டம்பர் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள் அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×