என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் பலி
Byமாலை மலர்3 Sep 2019 12:45 PM GMT (Updated: 3 Sep 2019 12:45 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி:
கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜுனன்(28) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த பிந்துவின் வீட்டார், அவரை கண்டித்துள்ளனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி, வீட்டைவிட்டு வெளியேறியது.
திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில்வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் பஸ்நின்ற போது, பஸ்சில் இருந்து இறங்கி தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதைபார்த்த மற்ற பயணிகள் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார். மல்லிகார்ஜுனனை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவரும் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விவசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X